சேலம் 44வது வார்டில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சேலம் 44வது வார்டில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை

சேலம் 44வது வார்டில் பொங்கல் விழாவில் தூய்மைபணியாளர்கள் கவுரவிக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி 44-வது வார்டில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம், நாமக்கல் மண்டல செயலாளரும், வார்டு கவுன்சிலருமான இமயவரம்பன் தலைமை தாங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வார்டு செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். சேலம் வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காஜாமொய்தீன் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதன்படி தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து தீபாராதனை காண்பித்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

சமத்துவ பொங்கல் விழாவில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு பொருளாளர் ஜாகிர் நன்றி கூறினார்.

Tags

Next Story