திருச்செங்கோடு ஒன்றியத்தில் பொங்கல் விழா

திருச்செங்கோடு ஒன்றியத்தில் பொங்கல் விழாவை ராஜபாண்டி (எ) ராஜவேலு துவக்கி வைத்தார்

ஆண்டிபாளையம் AVC மைதானத்தில் தை பொங்கல் விழாவில் திருச்செங்கோடு ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், திமுக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளருமான ராஜபாண்டி (எ) ராஜவேலு கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தொடர்ந்து நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் , சிறுமொளசி ஊராட்சி அத்திப்பாளையம் அருந்ததியர் தெரு கிளையில் மாலா கோவில் கும்பிடும் விழாவில் திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ராஜபாண்டி (எ) ராஜவேலு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் ராஜவேல், கண்ணன், பழனி, சாமிநாதன், ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story