பொங்கல் பண்டிகை; சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை; சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஈரோடு மண்டலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 18ம் தேதி முடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

ஈரோடு மண்டலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 18ம் தேதி முடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக வருகிற 18.01.2024 தேதி முடிய ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, பழனி, சேலம், நாமக்கல், கரூர், சத்தி மற்றும் ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 புறப்பாடுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் அடர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story