குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா: நீதிபதி பங்கேற்பு

குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா: நீதிபதி பங்கேற்பு

பொங்கல் விழாவில் நீதிபதி

சேலம் குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட நீதிபதி சுமதி பங்கேற்றார்.

சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட நீதிபதி சுமதி மற்றும் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வக்கீல்கள் ஜெ.மு. இமயவரம்பன், கண்ணன், முருகன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.இந்த பொங்கல் விழாவில் அரசு வக்கீல்கள் தம்பிதுரை, மதன்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு காவடி ஆட்டம், நையான்டி மேளம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story