வந்தவாசியில் லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா

வந்தவாசியில் லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா

பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் லயன்ஸ் கிளப் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 324 மாவட்டத்தின் சார்பில் பொங்கல் விழா மாவட்ட லயன் ஆளுநர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி லயன் சங்கங்கள் இணைந்து மாவட்ட பொங்கல் விழாவில் மண்டப முகப்பில் பொங்கல் வைத்து கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நடன போட்டி,பாட்டு போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட முன்னாள் ஆளுநர் தளபதி, மாவட்ட செயலாளர் சரவணன் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா கொண்டாடினர் இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள் நரசிம்மன், அரவிந்த் குமார், ஆர்த்திஸ்வரி ராஜேந்திரன், மற்றும் லயன்ஸ் சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story