நெடுங்குணத்தில் ராமச்சந்திர பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் விழா

நெடுங்குணத்தில் ராமச்சந்திர பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் விழா

காணும் பொங்கல் விழா

நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜெகநாதபுரம் மற்றும் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விதமாக அந்த ஊர்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பல்லக்கில் புஷ்ப அலங்காரத்தில் சுவாமியை அழைத்துச்சென்றனர்.

இதில் நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.ஏழுமலை, அறங்காவலர் குழு தலைவர் நா.நித்யானந்தம், கோவில் பட்டாச்சார்யா கோவிந்தராஜ், அறங்காவலர்கள் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story