பொங்கல் பண்டிகை; திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

பொங்கல் பண்டிகை; திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் திமுக., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் திமுக., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி காஜாமலை பகுதி திமுக சார்பில் எடமலைப்பட்டி புதூர் தம்பி அப்பா திருமண மண்டபத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழிலதிபர் அருண் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அந்த நல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story