பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்!

புதுக்கோட்டை 27வது வார்டில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை நகர் 27 வது வார்டில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசினை மாமன்ற உறுப்பினர் மூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பச்சை அரிசி ஜீனி கரும்பு ரூபாய் 1000 ஆகியவை பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவித்தார் இதனால் மகிழ்ந்த பொதுமக்களுக்கு இன்று முதல் தைப்பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை 27 வது வார்டுக்கு உட்பட்ட டிவிஎஸ் ஸ்டோரில் அப்பகுதி பொதுமக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஜீனி முழு கரும்பு ரூபாய் 1000 ஆகிய தொகுப்பினை மாமன்ற உறுப்பினர் மூர்த்தி பொதுமக்களுக்கு வழங்கினார்கள் அதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மூர்த்திக்கும் தமிழக அரசின் மனமார்ந்த நன்றியும் பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags

Next Story