தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் நாளை ஜன.10 முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைப் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு ஜன.10ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளில் கூடுதல் பணியாளா்கள் நியமனம் செய்து இப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் பெற்ற தகுதியுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள் டோக்கனில் குறிப்பிட்ட நாள்களில் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

Tags

Next Story