குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

கிருஷ்ணராயபுரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி எம்எல்ஏ சிவகாமசுந்தரி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக மக்கள் அனைவரும் 2024 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ், நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ரேஷன் அட்டை குடும்பதாரர்களுக்கு தமிழக அரசு அளித்த பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூபாய் ஆயிரம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் சசிகுமார், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story