பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் துவக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்  துவக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 959 ரேஷன் கடை மூலம் 5 லட்சத்து 26 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவங்கி வைத்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று பரிசு மற்றும் ரொக்க பணம் ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story