குணராமநல்லூா் ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

குணராமநல்லூா் ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
குணராமநல்லூா் ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
குணராமநல்லூா் ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூா் ஊராட்சி புளிச்சிகுளம் நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினா் ஜான்சி ஜெயமலா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பரிசுத் தொகுப்பை வழங்கித் தொடக்கிவைத்தாா்.

மாவட்ட தொண்டரணித் தலைவா் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் இட்லி செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாஸ்டா் கணேஷ், மாவட்டப் பிரதிநிதி சமுத்திரபாண்டியன், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story