திமுக., நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

கூடுவாஞ்சேரியில் நடந்த விழாவில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பா அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கான பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கினார்.இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக், துணைத் தலைவர் ஜி கே லோகநாதன் ,வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story