பொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு

 வெங்கந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடக்கின்றன.

வெங்கந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடக்கின்றன.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்க ளுக்கு நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கும் பணி தொடங்கியது. இதில் மயிலம் அருகே வெங் கந்தூர் கிராமத்தில் நடந்த விழாவில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷீ நிகம், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், தி.மு.க. மயிலம் ஒன்றிய செயலாளர்கள் (தெற்கு) வழக்கறிஞர் சேது நாதன், (வடக்கு) மணிமாறன், (மத்திய) செழியன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் புனிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story