பொங்கல் தொகுப்பு விநியோகம் - ஆ.ராசா எம்.பி துவக்கி வைப்பு

பொங்கல் தொகுப்பு விநியோகம் - ஆ.ராசா எம்.பி துவக்கி வைப்பு

பொங்கல் தொகுப்பு வழங்கல் 

உதகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆ.ராசா எம்.பி துவக்கி வைத்தார்.
இன்று முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து உதகை எச்.பி.எப் இந்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story