செய்யாறில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு

செய்யாறில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஓ ஜோதி பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவத்திபுரம் நகராட்சியில் 24,25,26, மற்றும் 27 ஆகிய 4'வார்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியிக்கு நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார்.

செய்யாறு தாசில்தார் முரளி, நகர மன்ற உறுப்பினர்கள் கே.விஸ்வநாதன், கங்காதரன், செந்தில்குமார், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் ரவிக்குமார், ராம்ரவி, கோபு, கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story