பொங்கல் பரிசு ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்

பொங்கல் பரிசு ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்

பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சிவகங்கையில் வெள்ளையர்களிடம் இழந்த மண்ணை போரிட்டு மீட்டெடுத்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் 249வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையை அடுத்துள்ள பையூர் கிராமத்தில் அரசு சார்பில் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பொங்கல் பரிசு குறித்த கேள்விக்கு, ஏற்கனவே 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்றும், அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story