பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கல்
நாகர்கோவிலில் பொங்கல் தொகுப்பு பரிசு கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கப்படும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டுவரும் தளவாய்புரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இன்று (10.01.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுக்களால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,74,857 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத்தொகை ரூ.1000/- சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து நியாய விலைக்கடைகளிலும் 10.01.2024 முதல் 13.01.2024 வரையிலும் 14.01.2024 அன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். என கூறினார்.

Tags

Next Story