பொன்னமராவதி- சென்னை குளிர்சாதனம் பஸ் மீண்டும் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு!

பொன்னமராவதி- சென்னை குளிர்சாதனம் பஸ் மீண்டும் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு!

குளிர்சாதனம் பஸ்

கோடை காலம் என்பதால் புழுக்கம் காரணமாக பயணிகள் குளிர்சாதன பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுகை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுக்கா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, தீயணைப்பு நிலையம், வங்கிகள், வேளாண்மை வளர்ச்சி அலுவலகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையம், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. பணி மற்றும் தொழில் நிமித்தமாகவும் படிப்புக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்னைக்கு சென்று வருகின்றனர். பொன்னமராவதியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் வழக்கமாக இந்த பஸ்ஸில் பயணிப்பூர் புதுக்கோட்டை, திருச்சி சென்று பஸ் மாற வேண்டி உள்ளது. இப்போது கோடை காலம் என்பதால் புழுக்கம் காரணமாக பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட குளிர்சாதன பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story