கொங்கனூர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

கொங்கனூர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
X

பூச்சாட்டு விழா

சங்ககிரி அருகே கொங்கனூர் மாரியம்மன் கோவிலில் பூக்சாட்டு விழா....
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகேயுள்ள சென்றாயனூரில் மிகவும் பிரசித்தி பெற்றஸ்ரீ கொங்கனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கமாகும்,இதனையடுத்து பிப்ரவரி மாதம் 17 ந் தேதி கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இன்று பக்தர்கள் விரதம் இருந்து தினந்தோறும் கொங்கனூர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக பூஜை தீபராதனை செய்து வழிபாடு நடைபெறுகிறது,பொங்கல் விழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றாங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்த குடம் எடுத்தல் பூங்கரகம் எடுத்தல் கடவுள் வேடம் அணிந்து கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு அம்மன் திருவீதி உலா கொட்டாயூர் நல்லங்கியூர் வட்ராம்பாளையம் வழியாக கோவில் சன்னதி வந்தடைந்தது. இதனையடுத்து சன்னதி முன்பு இரவு முழுவதும் பாரன் நடத்தல் ,சரபங்காநதியில் பக்தர்கள் புனித நீராடி அலகு குத்துதல் சிறுவர்கள் உடம்பில் சேற்று மண்ணை தடவிக்கொண்டு சேத்து முட்டி சட்டி எடுத்தல், 1008 முறை நிலத்தில் படுத்து எழுந்து வருதல், பொங்கல் வைத்தல்,மாவிளக்கு தட்டம் எடுத்தல், முடி காணிக்கை செய்தல் கெடா வெட்டுதல், அக்னி கரகம் எடுத்தல் ,பெண்கள் நாக்கு அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story