திடீரென துர்கா ஸ்டாலினை பார்த்த பொதுமக்கள்..!

திடீரென துர்கா ஸ்டாலினை பார்த்த பொதுமக்கள்..!

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்.

திருக்கடையூர் அமிதகடேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இங்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்ய வருகை தந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் கோவிலுக்குள்ளே சென்று கள்ள வாரண பிள்ளையார், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். அதனை அடுத்து கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்சியுடன் துர்கா ஸ்டாலினினுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் மகிழ்ந்தனர்.

Tags

Next Story