அஞ்சல்துறை பெண் ஊழியர் மர்ம மரணம்

அஞ்சல்துறை பெண் ஊழியர் மர்ம மரணம்

சம்பவம் நடந்த வீடு

சாயல்குடி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அஞ்சல்துறை பெண் அதிகாரியின் மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் டி.மாரியூரில் உள்ள கிளை தபால் நிலையத்தில் அஞ்சலக அதிகாரியாக பணியில் இருந்த வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகள் பால விநாயகசெல்வி (23) திரவியபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டிலிருந்து அதிகமாக புகை வந்ததை அடுத்துஅக்கம் பக்கத்தினர் சென்று பார்க்கும் போது முற்றிலும் எரிந்த நிலையில் அவர் கிடந்ததைப் பார்த்து அலறி அடித்து சாயல்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது இர்ஷாத் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மரணம் அடைந்தவர் அஞ்சலக அதிகாரி என்பதால் உடனடியாக கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர் லால் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்து நேரடியாக விசாரணையை தொடங்கினார். பெண் அதிகாரியான பால விநாயக செல்விக்கு வெல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் திருமணம் ஆகி பார்கவி என்ற ஆறு மாத பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. கணவனும் மனைவியும் சந்தோசமாக குடியிருந்து வந்த நிலையில் இந்த திடீர் தற்கொலை உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அலுவலக பணிச்சுமை காரணமாக சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story