சேலத்தில் தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம்

சேலத்தில் தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம்

 தபால் துறை

சேலத்தில் தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம் 10-ந் தேதி நடக்கிறது.
சேலம் கிழக்கு தபால் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சேலம் தலைமை அஞ்சலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் தபால் சம்பந்தமான குறைகள் ஏதேனும் இருப்பின் நேரில் அல்லது முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம் என்ற முகவரிக்கு வருகிற 5-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்க வேண்டும். மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., விரைவு தபால் பற்றிய புகார் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தில் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story