திருப்பூரில் போலிசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம்!

திருப்பூரில் போலிசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம்!

தபால் வாக்குப்பதிவு

திருப்பூரில் போலீசாருக்கு தபால் வாக்கு பதிவு முகாம் நடைபெற்றது.
போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம் திருப்பூர், நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19&ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. இதுபோல் தேர்தல் பணியில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுகிற மாநகரத்தில் பணியாற்றுகிற போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம் நேற்று திருப்பூரில் உள்ள தெற்கு ரோட்டரியில் நடந்தது. இதில் 700&க்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு செலுத்தினர். இதனை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story