செந்துறையில் அஞ்சலக சிறப்பு முகாம்

செந்துறையில் அஞ்சலக சிறப்பு முகாம்

அஞ்சல்துறை சிறப்பு முகாம் 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டார வள மையத்தில் அஞ்சல்துறை சார்பிலான சிறப்பு முகாம் நேற்று நடைப்பெற்றது. இதில் அஞ்சல்துறையின் பல்வேறு வகையான சேமிப்பு கணக்குகள், செல்வமகள் திட்டம், மகளிர் மேன்மை திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் வேண்டி ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி நேற்று நடைப்பெற்ற முகாமில் 30 பேரும், இன்று நடைப்பெற்ற முகாமில் 50 பேரும் விண்ணப்பித்து இருந்ததாக தெரிவிக்கபட்டது. இதில் அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story