அரசு அலுவலர்களுக்கான தபால் ஓட்டு பதிவு தொடக்கம்!

அரசு அலுவலர்களுக்கான தபால் ஓட்டு பதிவு தொடக்கம்!

அஞ்சல் வாக்கு

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகிய பணிகளில் பங்கேற்கும் அரசு ஆசிரியர்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகிய பணிகளில் பங்கேற்கும் அரசு ஆசிரியர்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை செலுத்தினர். புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதல் கட்ட தேர்தல் பணிப் பயிற்சி ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா இதில் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ர. ராஜலட்சுமி, புதுக்கோட்டை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்,வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை பயிற்சி மைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் செலுத்தினர்.

Tags

Next Story