CAA விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டி

CAA விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டி
CAA விற்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் CAA சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் CAA சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து, அதிமுக மாணவரணி சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக சிறுபான்மை மக்களோடு இணைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் புரட்சித் தமிழர் எடப்பாடி யாருக்கு நன்றி என தெரிவித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சுவரொட்டியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story