பழையசீவரம் சாலையில் பள்ளம் - வாகன ஓட்டிகள் அச்சம்

பழையசீவரம் சாலையில்  பள்ளம் -  வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையை ஒட்டி ஆபத்தான பள்ளம் 

காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இச்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நபார்டு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு முதல் அதற்கான பணி துவங்கி நடைபெறுகிறது. இந்நிலையில், பணி நடைபெற்று வரும் வாலாஜாபாத் நோக்கி செல்லும் பழையசீவரம் சாலையோரம், அபாயகரமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. மின்வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, விபரீதம் ஏற்படுவதற்கு முன்னதாக பழையசீவரம் சாலையோர பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Tags

Next Story