கோழிப்பண்ணையில் தீ விபத்து - கொத்து கொத்தாக மடிந்த கோழிகள்

ஆம்பூர் அருகே கோழி பண்ணையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கள் துருவம் பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் துரை முருகன். இவர் அதே பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் கோழி பண்ணை நடத்திவருகிறார். இரவு திடீரென்று மின் கசிவு எற்போட்டு கோழிப்பண்ணை பற்றி எரிய தொடங்கியது. இந்த பண்ணையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிருடன் எரிந்து சேதமானது மற்றும் கோழி தீவனம் அதுவும் எரிந்து சேதமானது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது/ இதை குறித்து ஆம்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story