ஈரோடு மாவட்டத்தில் கோழிகளுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் கோழிகளுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
X
மாவட்ட ஆட்சியர் 
ஈரோடு மாவட்டத்தில் கோழிகளுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக எதிர்வரும் 01.02.2024 முதல் 14.02.2024 வரை வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடத்தப்பட உள்ளது.

சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை அனைத்துகோழி இனங்களையும் பாதிக்கும் வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கெட் நோய் (Raniket Disease) வெய்யில் காலங்களில் அதிக அஅளவில் பரவி, 100 சதவீதம் வரை கோழிகளில் இறப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நோய் கண்ட கோழிகள் வெள்ளைக்கழிச்சல், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும். கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவியபின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது கடினம். எனவே ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும்,

இத்தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் தடுப்பூசியினை போட்டு கோழிகளில் ஏற்படும் இறப்பினை தவிர்ப்பதன் மூலம் கோழிவளர்ப்பில் அதிகலாபம் பெறலாம். ஆகவே இந்த அரிய வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story