புதருக்குள் சாராய ஊறல் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

புதருக்குள் சாராய ஊறல் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

சாராய ஊறல் அழிப்பு 

முள்ளுவாடி கிராமத்தில் போலீசாரின் சாராய வேட்டையில் 1100 லிட்டர் கள்ள சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓடை பகுதிக்கு அருகே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த சாராய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

பின்னர் முட்புதருக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 1100 லிட்டர் கள்ள சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்து, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களையும் தீயிட்டு எரித்தனர்.

Tags

Next Story