தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 19ஆம் தேதி மின் தடை

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 19ஆம் தேதி மின் தடை

மின்தடை

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற 19ஆம் தேதி புதன்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற 19ஆம் தேதி புதன்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துாத்துக்குடி நகர் செயற் பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி 110/22 கே.வி நகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 19.06.2024 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 09.00 மணிமுதல் பிற்பகல் 02.00 மணிவரையில் கீழ்காணும் பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு,தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு. டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, கந்தாசாமிபுரம், இஞ்ஞாசிரியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகர், குறிஞ்சி நகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம்,CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

Tags

Next Story