திருப்பூரில் எந்த இடங்களில் நாளை மின் தடை

திருப்பூரில் எந்த இடங்களில் நாளை மின் தடை

மின் தடை 

திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிப்பாளையத்தில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.

வீரபாண்டி மின்சாரவாரிய செயற்பொறியாளர் டேனிஷ் வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது-வீரபாண்டி துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜி நகர்,முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சி ப்பாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர்,குப்பாண்டம்பாளையம் எம். ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை,முல்லை நகர், டி. கே. டி மில் ஆகிய இடங்களிலும் ஆண்டிபாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்குப்பகுதி, ஜுவா நகர், சின்னியக்கவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்வம் நகர், வஞ்சிப்பாளையம்,மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீ நிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story