துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அதிமுகவினர் சாலை மறியல்

துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அதிமுகவினர்  சாலை மறியல்
சாலை மறியல்
சூணாம்பேடு ஆரவல்லி நகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், தி. மு. க. , அரசை கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ. தி. மு. க. , சார்பாக, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ. தி. மு. க. , செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சூணாம்பேடு சுற்று வட்டார பகுதியில் நீரில் மூழ்கி சேதமான நெற்பயிருக்கு நிவாரணம் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பல்லாவரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , கருணாநிதியின் மகனும், மருமகளும், வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கழக அமைப்புச் செயலர் முருகுமாறன், மதுராந்தகம் எம். எல். ஏ. , மரகதம் ஆகியோர் பங்கேற்று, கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போதே, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அ. தி. மு. க. , வினர், சூணாம்பேடு மதுராந்தகம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால், சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சு நடத்தி, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது

Tags

Next Story