மின்சாரம் துண்டிப்பால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழப்பு

மின்சாரம் துண்டிப்பால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழப்பு

மின் வெட்டால் இருள் சூழ்ந்த சாலை

கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
பள்ளிபாளையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை நான்கு மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிபாளையம் காவல் நிலையம் சாலை, திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது .மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் இல்லாததால், விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தனர். பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags

Next Story