சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

மின்தடை

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளானா சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், கரியமாணிக்கம், எதுமலை தெற்கு, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் 2 நகர், கூத்தூர், நொச்சியம், பலூர், பாச்சூர், திருவாசி, குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கபட்டி, கோவத்தக்குடி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையபட்டி, அய்யம்பா ளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story