மின் வயர் அறுத்ததால் மின்சாரம் துண்டிப்பு

மின் வயர் அறுத்ததால் மின்சாரம் துண்டிப்பு
தென்காசியில் மின் வயரை அறுத்து சென்ற லாரி இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
தென்காசியில் லாரி மின் வயரை அறுத்து சென்றதால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள மேலகரம் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி அருகில், லாரி ஒன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்தது அப்போது உள்ள மின் வயர்களை அறுத்து சென்றுவிட்டது. இதில் 15 வீடுகளுக்கு மின்விநியோகம் செய்யப்படும் மின் வயர்களும் அருந்து விழுந்தன.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளத. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மின்சார வாரிய அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story