அரவக்குறிச்சியில் இன்று மின்தடை

அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகப்பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான, ஆண்டி செட்டிபாளையம், ராஜபுரம், ரங்கநாதபுரம், நொய்யல், மலைக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது,என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேலே கண்ட சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பை அளிக்குமாறும், தங்கள் பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Tags

Next Story