அரும்பாவூரில் நாளை மின்தடை

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் ஜனவரி - 3ம் தேதி நாளை புதன்கி ழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலை "யாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவாள்மேடு, கவுண்டர்பாளையம், அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில், அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக் காடு, கள்ளப்பட்டி, அரசடி, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது. என கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story