ஆரோவில், திருநகர் பகுதியில் மின் நிறுத்தம்

ஆரோவில், திருநகர் பகுதியில் மின் நிறுத்தம்

பைல் படம் 

திருநகர் மற்றும் திருச்சிற்றம்பலம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை ஆரோவில் பகுதியிலும், நாளை மறுநாள் திருநகர் பகுதியிலும் பகுதி நேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் துணை மின்நிலையத்தில் ஆரோவில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை கோட்டக்கரை, இரும்பை, ஆரோவில், மாத்தூர், எல்லதரசு, பெரிய கொழுவாரி, சின்ன கொழுவாரி, பிள்ளைச்சாவடி, கழுப்பெரும்பாக்கம், மொன் னையம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதே போல் திருநகர் உயர் அழுத்த மின்பாதையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை திருச்சிற்றம்பலம், மயிலம் ரோடு (பகுதி), பூத்துறை தொழில்பேட்டை, திருநகர், எம்.கே. சாவடி, கலைவாணர் நகர், பட்டானுர், மொரட்டாண்டி, நாவற்குளம், ஆரோ அர்ச் சர்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற் பொறியாள்ற் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story