எழுவனம்பட்டியில் 23ம் தேதி மின்தடை

எழுவனம்பட்டியில் 23ம் தேதி மின்தடை

மின் நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டம், எழுவனம்பட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜன.23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எழுவனம்பட்டி, வெரியப்பநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, பண்ணைப்பட்டி, கருப்பமூப்பன்பட்டி, உச்சபட்டி, ராமநாயக்கன்பட்டி, மஞ்சளார் டேம், தேவதானப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story