ஈரோட்டில் 23 ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

ஈரோட்டில் 23 ம் தேதி  மின்சாரம் நிறுத்தம்

மின் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஈரோட்டில் 23 ம் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
ஈரோடு, வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வெட்டுக்காட்டுவலசு மின் பாதையில் 23 ம் தேதியான செவ்வாய்க்கிழமை மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் ஈரோடு வி.ஜி.வலசு, வேணுபுரம், கிருஷ்ணா கார்டன், முனி யப்பம்பாளையம், பாரதியார் நகர், எல்.ஐ.சி.நகர், கைகாட்டிவலசு, திருவள்ளுவர்நகர் போன்ற பகுதியில் அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story