கள்ளிமந்தயத்தில் பிப்.06 ஆம் தேதி மின் நிறுத்தம்

கள்ளிமந்தயத்தில் பிப்.06 ஆம் தேதி மின் நிறுத்தம்

மின் தடை

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தில் வருகின்ற 6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் பிப்.06 ஆம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளிமந்தயம், சின்னகவுண்டன்வலசு, பொருளுர். கொத்தாயம், கீரனுர், பூசாரிபட்டி, பாலகவுண்டன்பட்டி, அப்பியம் போன்ற பகுதியில் உள்ள கிராமங்களிலும் மின் நிறுத்தம் என கள்ளிமந்தயம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story