குறிஞ்சிப்பாடியில் இன்று மின் தடை

குறிஞ்சிப்பாடியில் இன்று மின் தடை

பைல் படம் 

குறிஞ்சிப்பாடி, கோரணப்பட்டு, தோப்புக்கொல்லை துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோக பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கோரணப்பட்டு, தோப்புக்கொல்லையில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அயன் குறிஞ்சிப்பாடி, குருவப்பன்பேட்டை, வரதராஜன் பேட்டை, மேலபுதுப்பேட்டை, ரெட்டிபாளையம், பூதம்பாடி, டி. வி.நல்லூர், ஓணங்குப்பம், சத்திரம், வேகக்கொல்லை, ஆயிப்பேட்டை, பிள்ளைப்பாளையம், காட்டு வேகாக்கொல்லை, ரெங்கநாதபுரம், மேட்டுவெளி, இலங்கை அகதிகள் முகாம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9. மணி முதல் 11 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story