நாமக்கலில் நவ.15இல் மின்நிறுத்தம்

நாமக்கலில் நவ.15இல் மின்நிறுத்தம்

கோப்பு படம்


நாமக்கல் பகுதியில், வருகிற 15ம் தேதி, மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பகுதியில், வருகிற 15ம் தேதி, மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் வழங்கிட, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட, மின்பாதை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நாமக்கல் நகரில் உள்ள துணை மின் நிலைய பகுதியில், வருகிற 15ம் தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதையொட்டி நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்ஜிஓ காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில், வருகிற 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story