கணவன அள்ளி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம்

கணவன அள்ளி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம்

மின் நிறுத்த அறிவிப்பு 

வருகின்ற திங்கட்கிழமை கணவன அள்ளி துணைநிலைத்துக்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணவன அள்ளி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் கணவன அள்ளி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான பெலமாரனஅள்ளி, கோட்டூர், சோமனஅள்ளி, புலிக்கல், மோட்டூர், பொப்பிடி, கரகூர், புலிக்கரை, பத்தல அள்ளி, காட்டம்பட்டி, நல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

என இந்த தகவலை வெள்ளிசந்தை, மின்நிலைய செயற்பொறி யாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story