தூத்துக்குடியில் 11ஆம் தேதி மின்தடை

தூத்துக்குடியில் 11ஆம் தேதி மின்தடை

நாளை மின்தடை

தூத்துக்குடியில் வருகிற 11ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் வருகிற 11ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் வருகின்ற 11.01.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக காமராஜர் நகர், கீழ‌ அரசடி, மேல அரசடி, திரேஸ்நகர், சாகிர் உசேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, மேட்டுப்பட்டி,நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, தளவாய்புரம், பட்டிணமருதூர், ராமர்விளை, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், ஹவுசிங்போர்டு, குமரன் நகர், கோவில்பிள்ளை விளை, குருஸ்புரம், பண்ணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம், T.சவேரியர்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி, உப்பள பகுதி, முத்தையார் காலனி, அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story