தூத்துக்குடி மாநகரில் 30ஆம் தேதி மின்தடை

தூத்துக்குடி மாநகரில் 30ஆம் தேதி மின்தடை

மின் தடை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 30.01.24 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வடக்கு காட்டன்ரோடு, கிப்சன் புரம், ரங்கநாதபுரம், தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, டி ஆர் நாயுடு தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், சண்முகபுரம், ஜின் பேக்டரி ரோடு, எட்டயபுரம் ரோடு, ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சி நகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், பெருமாள் புரம், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி ஆதி பராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story