6ஆம் தேதி தூத்துக்குடியில் மின் தடை

6ஆம் தேதி தூத்துக்குடியில் மின் தடை
மின் தடை
6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை

தூத்துக்குடியில் வருகிற 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி பீச்ரோடு துணைமின் நிலையத்தில் வருகின்ற 06.02.2024 செவ்வாய்க் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இனிகோநகர், ரோச்‌ காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட்பீட்டர்கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர் முடுக்குகாடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story