லால்குடி பகுதியில் பாதுகாப்பு கருதி உயர்அழுத்த மின்பாதையில் மின்தடை

லால்குடி பகுதியில் பாதுகாப்பு கருதி உயர்அழுத்த மின்பாதையில் மின்தடை

மின் தடை 

திருச்சி மாவட்டம் லால்குடி கைலாஷ் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி உயர்அழுத்த மின்பாதையில் மின்தடை இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி கைலாஷ் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி அதன் அருகே செல்லும் உயர்அழுத்த மின்பாதையை நிறுத்தம் செய்ய வேண்டியுள்ளதால் இன்று 24 ந்தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளான JJ நகர்,பாரதி நகர், அன்னை நகர்,கைலாஷ் நகர்,வாசவி நகர்,அல் மதினா நகர்,தென்கால் ரோடு,திருமங்கலம் தனியார் பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல்.

Tags

Next Story